search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் கம்பெனி ஊழியர் தற்கொலை முயற்சி"

    ஈரோட்டில் கந்து வட்டி கொடுமையால் பால் கம்பெனி ஊழியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 31). பால் கம்பெனி ஊழியர். இவரது மனைவி நந்தினி (25).

    குடும்ப சூழ்நிலை காரணமாக சம்பத்நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 15 ஆயிரம் கடன் பெற்றார்.

    அதில் பாதி பணத்தை பெருமாள் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஸ்கூட்டரில் பெருமாள் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அங்கு வந்து கந்து வட்டி கேட்டதாக தெரிகிறது. பணம் கேட்டு பெருமாளை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    நிதி நிறுவனத்துக்கு பெருமாளை தூக்கி சென்று தாக்கி மிரட்டல் விடுத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் தெரிகிறது.

    இதனால் பெருமாள் மன விரக்தியில் இருந்தார். வீட்டில் இருந்த அவர் வி‌ஷம் குடித்தார். இதை பார்த்த அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் பெருமாளை மீட்டனர்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு பெருமாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×